புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் 'கண்களும் கவிபாடுதே' என்ற படத்தை தயாரித்து வருகிறார் 'இதயவாசல்' இயக்குநர் கே. சந்தர்நாத். மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே 'கண்களும் கவிபாடுதே'. இளையராஜாவின் தேனிசையில் ஐந்து அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. முற்றிலும், புதுமையான, விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெற இருப்பது சிறப்பம்சம்.

புதுமுகங்கள் ரஜித், ஆகாஷ் மற்றும் ரத்தன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க இவர்களுடன் மிருதுளா, விகிதா, லக்ஷணா ஆகியோர் நாயகியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com