ஏவிஎம் பேனரில் சூர்யா
'கனா கண்டேன்' படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த் அடுத்து சூர்யாவை நாயகனாக வைத்துப் படம் ஒன்றை ஏவிஎம் பேனரில் தயாரிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. படத்தின் கதையை ஏ.வி.எம். சரவணனிடம் ஆனந்த் சொல்ல, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். சந்தோஷத்தில் அடுத்த கட்ட வேலையை சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டார் ஆனந்த். கதாநாயகி மற்றும் நடிக, நடிகையர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இசை ஹாரிஸ் ஜெயராஜ். வருகிற ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

கே.வி. ஆனந்த் வேறுயாருமல்ல; 'சிவாஜி' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com