காது கேளாதது ஒரு தடையல்ல
அவரது ஊர் உத்தராகண்ட்டில் உள்ள மதுபானி. அவருக்கு காது கேட்காது. தாயோ கல்வியறிவு இல்லாதவர். ஆனாலும் அவருக்கு ஓர் ஆசை: தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பது. தனது குறைபாட்டை ஒரு தடையாக நினைக்காமல் தொடர்ந்து உழைத்தார். படித்தார். இதோ, இப்போது மசூரியிலுள்ள லால் பஹதூர் சாஸ்திரி அகாடமியில் ஐ.ஏ.எஸ். ஆக பயிற்சி பெற்று வருகிறார். ஊனம் ஒரு தடையல்ல என்று நிரூபித்திருக்கும் அந்த ஏழை கிராம மாணவரின் பெயர் நிரஞ்சன் குமார். ஆனாலும் குமாருக்கு ஒரு குறை. எல்லோரையும் போலத் தன்னால் சரளமாக ஆங்கிலம் பேச இயலவில்லையே என்று. அதற்காகத் தற்போது தனிப்பயற்சி எடுத்துக் கொண்டு வரும் அவர், 'நான் நன்கு தயார் செய்தேன் என்றாலும் இவ்வளவு தூரம் வருவேன்' என்று நினைக்கவில்லை என்கிறார் தன்னடகத்துடன்.

அரவிந்த்

© TamilOnline.com