வந்தார்கள் - வென்றார்கள்!
வந்தார்கள் வந்தார்கள் வாரிவழங்கவா வந்தார்கள்?!
வாரிச் சுருட்ட அல்லவா வந்தார்கள்!!
தந்தார்கள் தந்தார்கள் தங்கமும் வெள்ளியுமா தந்தார்கள்?!
தர்ம அடியும் தகரத்தட்டுமல்லவா தந்தார்கள்!

சொன்னார்கள் சொன்னார்கள் சுகவாழ்வு தருவதாகச் சொன்னார்கள்..
சொன்னவர்கள் அனைவருமே சொர்க்கத்திலே சுழல்கிறார்கள்!
சென்றார்கள் சென்றார்கள் சிரம்தாழ்த்தி சென்றார்கள்...
சென்றவர்கள் அனைவரும் சிகரத்திற்கே சென்றார்கள்!

அழைத்தார்கள் அழைத்தார்கள் அடக்கத்தோடு அழைத்தார்கள்..
அழைத்தவர்கள் அனைவருமே ஆகாயத்திலே அலைகிறார்கள்!
வளைந்தார்கள் குழைந்தார்கள் வாகைசூட வளைந்தார்கள்..
வளைந்தவர்கள் அனைவருமே வசதிகண்டு தொலைந்தார்கள்!

நின்றார்கள் நின்றார்கள் நீ(நி)தி - நிலைநாட்ட நின்றார்கள்..
நின்றவர்கள் அனைவருமே நெறிபிழ்ந்து நின்றார்கள்!
வென்றார்கள் வென்றார்கள் விண்ணதிர வென்றார்கள்..
வென்றவர்கள் அனைவருமே வெறிகொண்டு வீழ்ந்தார்கள்!!

கரு. மாணிக்கவாசகம்

© TamilOnline.com