மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி
''அன்பு தான் நம்ம வாழ்க்கையோட ஆணி வேர். ஒரு சில நிகழ்வுகளால் உணர்ச்சிகள் அலை பாயுறப்ப ஆணிவேர்ல ஒரு சலனம் ஏற்பட்டு அடங்கும். அப்படி சலனம் ஏற்படுறப்ப ..... ஆணிவேர் இன்னும் ஒரு படி ஆழமா பூமியில் வேர்விடுது. அப்படிப்பட்ட ஒரு அன்பின் சலனம் தான் 'பாண்டவர் பூமி'.

மீடியா ட்ரீம்ஸ் - பாரதி, நிலாக்காலம், லிட்டின் ஜான், கிருஷ்ண கிருஷ்ணா ஆகிய பலதரப்பட்ட செல்லுலாய்ட் பதிவுகளைத் தந்த நிறுவனம். இப்போது இளம் இயக்குநர் திரு. சேரனுடன் கைகோர்த்து, இதுவரை செய்திருக்காத பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாய், கம்பீரமாய், கவிதையாக உருவாக்கி வரும் புதிய செல்லுலாய்ட் சித்திரமே பாண்டவர்பூமி.

பஞ்ச பாண்டவர்களால் உருவானது தான். இந்த பாண்டவர் பூமி. ஆம் மீடியா ட்ரீம்ஸ், இயக்குநர் சேரன், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான், கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகிய ஐந்து கலைஞர்களின் உளிகளால் செதுக்கப்பட்டதே பாண்டவர் பூமி.

ராஜ்கிரண், அருண்குமார், ஷமிதா, மனோரமா, கவிதா, சந்திரசேகர், ரஞ்சித், முகேஷ் திவாரி, வினுசக்கரவர்த்தி, விஜயகுமார், சார்லி, சத்யன், கலாவதி, அன்னம் என நிறைய பேர்.

© TamilOnline.com