மண்வாசனை கமழும் 'ஈரநிலம்'
இயக்குநர் பாரதிராஜா மீண்டும் தனக்கே உரிய பாணியில் மண்வாசனை கலந்த படத்தை ஒரு கிராமத்தில் வைத்து இயக்கிவருகிறார். 'ஈரநிலம்' என்ற இவரது படத்தில் இவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடத்திருக்கிறார் நந்திதா. கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் சுஹாசினி நடித்திருக்கிறார். இளவரசு, முருகன், சிவா, வெங்கட் மற்றும் மகேஷ் போன்றோர் இந்தப் படத்தில் உடன் நடித்திருக்கிறார்கள். ஆர். செல்வராஜ் எழுதியிருக்கும் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாரதிராஜா. இந்தப் படத்திற்கு இசை சிற்பி. ஒளிப்பதிவு சி. தனபாலன்.

இந்தப் படத்தின் கதை, ஒரு அம்மாவையும் அவரது மூன்று மகன்களையும் மையப்படுத்திருக்கிறது. அதிலும் மூன்று மகன்களில் இரண்டு பேர் இராணுவத்தில் இருக்கிறார்கள். கடைசி மகன் இவர்களது நிலத்தைக் கவனித்துக் கொள்கிறான். ஆனால் போரில் அந்த இரணடு மகன்களுமே இறந்துவிடுவதால், தன் மூன்றாவது மகனையும் போருக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார் அந்தத் தாய்.

யாமினி

© TamilOnline.com