வேதம்
ஒருவன் தான் அழிந்தாலும்
உலகோர் அனைவரும் வாழவேண்டி
குருவின் ஆணையையும் மீறி
குலம் கோத்திரம் பாராமல்
பாமரரும் பரம பதமடைய
ஊரைக்கூட்டி உயர்மதில் ஏறி
ஓம் நமோ நாராயணாய எனுமூ
உயர் திரு மந்திரத்தை
உரக்கக் குவி உய்வித்தான்
ஒப்பிலா மனிதன் இராமானுஜன்!

உருவம் தான் வேறு உள் ஆத்மா ஒன்றே
உண்மை இதனை உணர்ந்துவிட்டால்
உலகில் சண்டை சச்சரவேது?
படைப்பில் இல்லை ஏதும் வேறுபாடு
பார்க்கும் கண்களில் தானே குறைபாடு
என்னில் நீ உனைக் கண்டால்
அன்றே உலகம் உன் வசமாகும்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதெல்லாம்
உண்மையில் நமது அறிவீனம்
என்றே உபதேசம் செய்தவன் அவன்
அன்றும் இன்றும் எப்போதும்
அவன் சொல்லே நல் வேதமாகும்!

வடுவூர் கிருடஷ்ணன்,மேரிலாண்ட்.

© TamilOnline.com