பரத் நடிப்பில் உருவாகிறது 'கூடல் நகர்'
'காதல்' படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் பிரபலமான பரத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது பரத் நடிப்பில் உருவாகவிருக்கிறது 'கூடல் நகர்'. இவருக்கு இணையாக பாவனா மற்றும் சந்தியா என இரு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள்.

அண்ணாமலை பிலிம்ஸ் சார்பில் தயாராகிவரும் இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை சீனு ராமசாமி கவனிக்கிறார். இவர் பிரபல இயக்குநர் சீமானிடம் உதவி இயக்குநராக பல்வேறு படங்களில் பணியாற்றியவர்.

சபேஷ்-முரளி இசையமைப்பில் உருவாகும் 'கூடல்நகர்' படத்திற்கான படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் நடைபெறவிருக்கின்றன.

கள்ளம் கபடமற்ற ஓர் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை இக்கதை சொல்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com