குடியரசு துணைத்தலைவர்
புதிய குடியரசுத் துணைத் தலைவராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நஜ்மா ஹெப்துல்லாவையும், மூன்றாவது அணியின் ரஷீத் மன்சூரையும் தோற்கடித்தார். 70 வயதாகும் ஹமீத், ஐ.நா. உள்ளிட்ட இந்தியாவின் வெளியுறவுப் பதவிகளை வகித்தவர். சவூதி அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவுக்கான தூதராகப் பணியாற்றியவர். தேசியச் சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் பணி யாற்றியிருக்கிறார். புகழ்பெற்ற அலிகார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ள ஹமீத் அன்சாரி பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com