இயல் விருது தமிழுக்கென முயலுனர்: சோ.தர்மன்
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிறுகதை, நாவல் என எழுதிக் கொண்டிருக்கும் சோ.தர்மன் கதா விருது, இலக்கியச் சிந்தனை விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். இது வரை இரண்டு நாவல்களும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் ஓர் ஆய்வு நூலும் எழுதி வெளியிட்டிருக் கிறார். இவருடைய சிறுகதைகள் சிலவற்றை சாகித்திய அகாடெமி ஆங்கிலத்திலும், இந்தியிலும் இன்னும் வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்திருக்கிறது. பஞ்சாலைத் தொழிலாளியாகிய இவர் இருபத்தியைந்து வருடங்கள் பணியாற்றிய பிறகு தற்போது ஓய்வில் முழுநேர எழுத்து வேலையில் கோவில் பட்டியில் வசித்து வருகிறார்.

2005ம் ஆண்டின் சிறந்த நாவலாக புனைவு இலக்கியப் பிரிவில் சோ.தர்மன் எழுதிய 'கூகை' தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பரிசாக 500 கனடிய டாலர்கள் வழங்கப்பட்டது.

நன்றி: அ. முத்துலிங்கம்

© TamilOnline.com