சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
இயக்குநராக இருந்து நடிகராக புதிய அவதாரம் எடுத்த சுந்தர் சி. தான் தமிழில் இப்போது மிகப் பரபரப்பான நடிகர். 'தலைநகரம்', 'வீராப்பு' போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'பெருமாள்', 'தீ', 'பொறுக்கி', 'ஆயுதம் செய்வோம்' என வரிசையாகப் படங்களைக் கைவசம் வைத்திருக்கும் சுந்தர் சி., மனைவி குஷ்புவின் படத்துக்குக் கால்ஷீட் கேட்டும் கூடக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். தமிழ்த் திரையுலகத்துக்கு இன்னும் ஒரு புதிய அடிதடி, ஆக்ஷன் ஹீரோ கிடைத்திருக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com