பிரபஞ்சன் பேசுகிறார்
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற வெள்ளி விழா ஆண்டின் முதல் இலக்கிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 7, சனிக்கிழமை, மாலை 5.30க்கு, மில்பிடாஸ் நூலகக் கூடத்தில் நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சியில் சாகித்திய அகாதமி விருது முதல் பல தமிழ் இலக்கியப் பரிசுகள் பலவற்றைப் பெற்ற தலைசிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், மதுரை அனைத்திந்தி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி நிறுவனரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளருமான சுந்தர ஆவுடையப்பன் அவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் 'வானம் வசப்படும்', 'ஆண்களும் பெண்களும்', 'மானுடம் வெல்லும்', 'பிரும்மம்', 'நேற்று மனிதர்கள்', 'மகாநதி' போன்ற விருதுபெற்ற நூல்களை எழுதியவர்.

பிரபஞ்சன் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கான எழுத்துப்பட்டறை ஒன்றை வழங்க இசைந்து உள்ளார்கள். பட்டறைக்குப் போதுமான மாணவர்கள் சேர்ந்தால், சனிக்கிழமை முற்பகலில் பட்டறை தொடங்கும். ஆர்வம் உள்ளவர்கள் president@bayareatamilmanram.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

© TamilOnline.com