தமிழ்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஈரானிய பெண்!
ஈரான் நாட்டிலிருந்து படிப்பதற்காக இந்தியா வந்த ஒருவரை கோடம்பாக்கத்துக்கு நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் பரத்கண்ணா.

சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படம் 'ரீல் நம்பர் 15'. இப்படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.

பர்வீன், ராதா, ப்ரவாஸ் என்ற இந்த மூன்று கதாநாயகிகளில் முதல் இருவரை மிக எளிதாக தேடி கண்டுபிடித்துவிட்டார் இயக்குநர். மூன்றாவது கதாநாயகியை தேடி பெங்களூர் சென்ற போது இவர் கண்ணில் பட்டார் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். "கண்டேன் என் மூன்றாவது நாயகியை" என்று கூறி மளமளவென்று ப்ரவாஸை படத்திற்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்.

படிக்க வந்த இடத்தில் நடிப்போம் என்று ப்ரவாஸ் நினைத்திருக்க மாட்டார்!

கேடிஸ்ரீ

© TamilOnline.com