யூஸ் அன்ட் த்ரோ
யாரு ஓங்கூட மெட்ராஸில
படிக்கிற புள்ளைகளா'
மாடு மேய்க்கறவுக போயேன் அந்தப் பக்கம்
பாட்டி சத்தம் காட்டாம நகந்துருவா
'இந்தக் கேக் எதுக்குல வாங்கியாந்த
இதுல புளியங்கொட்ட பாதி போட்டுருப்பான்'
இவுருதான் பொருளாதாரத்தத்
தூக்கி நிறுத்தப் போறாராக்கும்.
அம்மா நாலும் தெரிஞ்சவ
நாகரிகமா நடந்துக்குவா
கடைசியில அவளும் கேட்டுட்டா
'இத எறிஞ்சுறவா எடுத்து வச்சுக்கிறவா'
யூஸ் அன்ட் த்ரோ டம்ளரப் பாத்து

சரவணக்குமார்

© TamilOnline.com