மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம்
மிசெளரி தமிழ் சங்கம் கடந்த ஜூன் மாதம் 9ம் திங்களின் இனிய மாலைப்பொழுதில் பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தது.

''அமெரிக்க வருகையால் பயன் அடைந்தது ஆண்களா? பெண்களா?'' என்ற தலைப்பில் நடைப்பெற்ற பட்டிமன்றத்தில் இரு அணிகள் கலந்து கொண்டனர்.

'பெண்களே' என்று ஆண்கள் குழுவினரும், 'ஆண்களே' என்று பெண்கள் குழுவினரும் வாதாடினார்கள். ஆண்கள் குழுவில் 'சன்' டிவி புகழ் திரு. ராஜா, யோவுதானியேல், வாசுதேவன் மற்றும் பொற்செழியன் ஆகியோர் பங்குகொண்டனர்.

பெண்கள் குழுவில் திருமதி உமையாள் முத்து, யசோதா இளங்கோ, சித்ரா சுப்ரமணியம் மற்றும் சுஜாதா கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். மிகுந்த காரத்துடனும், நகைச்சுவையுடனும் நடந்த இந்நிகழ்ச்சி வருகை தந்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது என்றால் அது மிகையாகாது.

அனந்தா கலுசிவலிங்கம்

© TamilOnline.com