செல்வத்துக்குப் பிடித்த ரோஜா அம்மன்
ஆர்.கே. செல்வமணியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘பொட்டு அம்மன்’ படத்தில் அம்மனாக உயர்ந்திருக்கிறார் ரோஜா.

‘’செல்வாவுக்கு என்னை விட்டா வேற ஆள் கிடைக்கல போலிருக்கு. என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் பிடிக்கிறது கூடப் பரவாயில்ல. அவர் எடுக்கிற எல்லா படத்திலயும் என்னைத்தான் கதாநாயகியாகப் போடுவேன்னு அடம் பிடிக்கிறது என்ன நியாயம்?’’ என்கிறார் கிண்டலாக.

‘’நியாயம்தான்! கவர்ச்சி வேடம்னாலும் நீங்கதான் நடிக்கணும். அம்மன் வேடம்னாலும் நீங்கத்தான் நடிக்கணும்’’ என்று பின்பாட்டு பாடினோம்.

பக்கத்தில் நின்றிருந்த செல்வமணி, ‘’அட நீங்க வேற.... நான் இளிச்சவாயன்னு இதிலிருந்தே தெரியல?’’ என்று பதிலுக்கு பதிலடி கொடுத்தார்.

தமிழ்மகன்

© TamilOnline.com