'பெண்கள்' விவகாரம்
பெண்கள்' படத்தைத் தயாரிப்பவர் பெரிய ஆட்டக்காரரின் தம்பி. ஆட்டம் என்று நாம் குறிப்பிடுவது, சினிமாவில் ஆடும் ஆட்டத்தையோ, சூதாட்டத்தையோ அல்ல.... கிரிக்கெட் ஆட்டத்தை. அந்தக் கிரிக்கெட் ஆட்டக்காரர், ஸ்ரீகாந்த். அவருடைய தம்பி தயாரிக்கும் படம் என்பதை அத்தனை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது படத்தின் கதையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. கதை?...

விபச்சாரத் தொழிலைப் பற்றிய கதை. கிராமத்தில் பெண்களை அடிமைகளாக நடத்தும் பெண்ணை எதிர்த்துப் போராடும் பத்திரிகையாளராக நெல்லை சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். இவர் சதிகாரர்களிடம் சிக்கி உயிரை விடுகிறார். அதைத் தொடர்ந்து கதாநாயகன் ஆகாஷ் அந்த இடத்துக்கு வந்து போராடி, எல்லாப் பெண்களையும் மீட்கிறார். இத்தகைய கதைக்கு ஸ்ரீகாந்த்தின் பெயரை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று யோசித்திருக்கலாம். அல்லது ஸ்ரீகாந்தின் உதவியில்லாமலேயே ஓடக்கூடிய கதையாகவும் இருக்கலாம்.



© TamilOnline.com