தில் நடிகர்
'சந்திப்போமா' படத்தைத் தயாரித்த அரோமா மணி அடுத்து விக்ரமை வைத்து 'விவேகா' என்ற படத்தைத் தயாரிக்கிறார். 'வாஞ்சிநாதன்' படத்தை இயக்கிய ஷாஜி கைலாஷ் இப்படத்தை இயக்குகிறார். இதற்கு கதை எழுதியிருப்பவர் ராசி. அழகப்பன். ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனில் 'மகளிர் மட்டும்', 'தேவர் மகன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பிறகு ஜெயராமைவைத்து 'வந்தேமாதரம்' என்ற படத்தை இயக்கியவர் இவர்.

அது சரி... 'சேது' படத்துக்குப் பிறகு 'தில்', 'கிங்', 'காசி' என்று இரண்டெழுத்துப் படங்களாக (நடுவில் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற 12 எழுத்து படத்தில் நடித்து தோல்வியைத் தழுவினார்.) நடித்து வரும் விக்ரம் 'விவேகா' என்ற மூற்றெழுத்தை அனுமதித்தது தில்லான விஷயம்தான்.

தமிழ்மகன்

© TamilOnline.com