குழம்பு வடாம்
தேவையான பொருட்கள்

காராமணி - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - 1 கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையானது
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை

பருப்பு வகைகளை முதல்நாள் இரவே ஊற வைக்கவும்.

மறுநாள் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

பிளாஸ்டிக் பேப்பரை வெயில்படும் இடத்தில் போட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

2, 3 நாட்கள் நன்றாக காய வைத்து டப்பாவில் எடுத்து வைக்கவும்.

குழம்பு, கூட்டு இவற்றில் வறுத்து போடலாம்.

வெங்காயம், கருவேப்பிலை இவற்றை பொடிபொடியாக நறுக்கிபோட்டும் செய்யலாம்.

ஆனால் அதிக நாட்களுக்கு வைத்து கொள்ள முடியாது. சீக்கிரம் கெட்டுவிடும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com