பானகம்
தாகத்தை தணித்து உஷ்ணத்தை குறைக்க கூடியது. செய்வதற்கு மிக எளிமையானது. கோகோகோலா, பெப்சி என்று பானங்கள் அருந்துவதைவிட நம் நாட்டில் வீடுகளில் செய்யும் இது போன்ற உடலுக்கு நன்மை பயக்ககூடிய பானங்களை நாமே தயாரித்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தரலாம்.

தேவையான பொருள்கள்

வெல்லம் (நன்றாக பொடி செய்தது) - தேவையான அளவு
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

முதலில் 2 1/2 டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

பிறகு தண்ணீரில் 1/2 டம்ளர் வெல்லப்பொடியை போட்டு நன்றாக கலக்கவும்.

1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடியை கலந்த தண்ணீரில் கலக்கவும்.

பானகம் ரெடி. இது ரொம்ப சுவையாக இருக்கும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com