மோர் ரசம்
தேவையான பொருட்கள்

சுமாராக புளித்த மோர் - 1 கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
அரிசிமாவு - 1ஸ்பூன்
தேங்காய் தூள் - 1/2 கரண்டி
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைபருப்பு, சீரகம் இவற்றை பொன்னிறமாக வறுக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் இவற்றையும் வதக்கவும். தக்காளியை தோல் உரித்து பச்சை மிளகாய், கடலைபருப்பு, சீரகம், தேங்காய் இவற்றுடன் சேர்த்து மிக்ஸியில்அரைக்கவும். அரைத்த விழுதை மோரில் கலந்து உப்பு, அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஈயச்சொம்பில் விட்டு நிதானமாக எரியும் அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கவும். கடுகு தாளித்து கொத்தமல்லி போட்டு கிளறி மூடவும்.

குறிப்பு: தேங்காய்க்கு பதில் இஞ்சி அரைத்து விட்டு ஓமம் தாளித்தால் வேறுவிதமான ருசி இருக்கும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்

© TamilOnline.com