இது தாங்குமா
சினேகா தனது அந்தஸ்தை மீறியவராகத் திரிகிறார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.

திரைத் துறையில் இன்னும் காலை ஊன்றாத நிலையில் அவர் வானளாவிய சம்பளம் கேட்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

"அப்படி எல்லாம் இல்லை. நான் நினைப்பதை சம்பளமாக என்னால் கேட்க முடியாது. எனது மார்கெட்டைப் பொறுத்து தயாரிப்பாளர்கள் தான் எனது சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள்.

நான் தகுதி இல்லாதவளாக இருந்தால் அவர்கள் எனக்கு இந்த அளவுக்குச் சம்பளம் தருவார்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, நான் அதிக சம்பளம் வாங்குவது உண்மையாக இருந்தால், இன்னமும் ஏன் வாடகை வீட்டில் வசிக்கிறேன்?" என்றார் சினேகா. இதற்கு பதில் கூற யாராவது இருக்கிறார்களோ?

© TamilOnline.com