"ஓ போடு"விற்குப் பின்னால்
"ஜெமினி"யின் வெற்றிக்கு "ஓ போடு" பெரும் அளவில் உதவியுள்ளது. இந்தப் பாட்டிற்கு ஆடிய ராணி மற்றும் கதாநாயகன் விக்ரம் இருவரும் புகழப்பட்டார்கள்; இயக்குனர் சரணும் கூட. ஆனால் இந்தப் பட்டியலி விடுபட்டுப் போனவர் பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்த அசோக் ராஜா தான். "இந்தப் பாடலைக் கேட்ட பின், நான் நடனத்தை அமைக்க இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேன். விக்ரம் ரொம்ப ஆர்வத்துடன் இருந்தார், அதனால் 10 நாட்கள் ஒத்திகை பார்க்கவேண்டும் என்றார்.

இயக்குனர் சரண் கூட இந்தப் பாடல் நிச்சயம் வெற்றிப் பெரும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது!" என்றார் அவர். "ஸ்ரீ", "காதல் அழிவதில்லை" போன்ற படங்களுக்குத் தற்போது நடனம் அமைத்துக் கொண்டிருக்கிறார் அசோக் ராஜா.

© TamilOnline.com