வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் கோடை விழா 2007
ஆகஸ்டு 18, 2007 சனிக்கிழமை அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் கோடை விழாவைக் கொண்டாட உள்ளது. இதில் சிறப்புப் பட்டி மன்றம், இளம் கவிஞர் களுக்கான கவிதைப் போட்டி, சிறுவர்களுக் கான பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன.

பட்டிமன்றத் தலைப்பு 'திரைப்பாடல்களில் சிறந்தது அன்றா? இன்றா?' இதற்குத் தலமை தாங்கும் திரு முல்லை நடவரசு திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றக் குழுவை சேர்ந்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகம், மேற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தமிழகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவை பேச்சாளர்களில் ஒருவர். இவர் ஒரு தமிழாசிரியர், சிறந்த பாடகர். அன்றைய மற்றும் இன்றைய பாடல்கள் இவருக்கு அத்துப்படி. நல்ல கவித்திறன் படைத்தவரும் கூட.

மேலும் விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org
குறிஞ்சி குமரன்: 408.398.2927 மின்னஞ்சல்: president@bayareatamilmanram.org
பிரவீன் ரகுராம்: 408.525.7508 மின்னஞ்சல்: secretary@bayareatamilmanram.org
TS ராம்: 510.406.0047
மின்னஞ்சல்: vp-admin@bayareatamilmanram.org

தமிழ்மன்றச் செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com