புகைக்க வேண்டுமா? பணிப்பெண்ணைக் கேளுங்கள்!
விரைவில் வரவிருக்கிறது புகைக்கத்தடை. அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்தான். மேலதிகாரியின் அனுமதி பெற்றுத்தான் அலுவலகங்களில் புகைக்க வேண்டுமாம். வீட்டிலோ மனைவியின் அனுமதியில்லாமல் கணவர்கள் புகைபிடிக்கக் கூடாதாம். அதுமட்டுமல்ல, வீட்டில் பணிப்பெண் இருந்தால் அவரும் அனுமதிக்க வேண்டும். எவ்வளவு இந்தியர்கள் இதனை முறையாகப் பின்பற்றுவார்கள் என்பது தெரியாது. ஆனால் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் அது சுற்றுச்சூழல் மாசைத் தடுக்கும் என மனிதவள ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் பீடி, சிகரெட் உறைகளில் முன்புபோல் மண்டை ஓடு அச்சிடத் தேவையில்லை என மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது இதுதானோ.

அரவிந்த்

© TamilOnline.com