நித்யாவின் மாசற்ற பரதநாட்டியம்
திருமதி விஷால் ரமணி (இயக்குனர், ஸ்ரீ க்ருபா டான்ஸ் கம்பெனி) அவர்களின் மாணவி நித்யா வெங்கடேஸ்வரன், ஆகஸ்ட் 10, சனிக்கிழமை, பாலோ ஆல்டோ, கலி·போர்னியாவில் ஒரு தனி பரதநாட்டிய நிகழ்ச்சியினை வழங்கவுள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திருமதி விஷால் ரமணியால் பயிற்றுவிக்கப்பட்ட நித்யா, சமீபத்தில் 2001-2002 சீசனில் சென்னையில் நான்கு தனி பரதநாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். சென்னையில் பிர்த்யேகமாக வழங்கப்பட்ட அம்சங்களைக் கொண்டு பாலோ ஆல்டோவில் உள்ள Cubberly Theaterல் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படும். சென்னையிலிருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் திரு மதுரை R. முரளீதரன் - நட்டுவாங்கம், பத்மா சேஷாத்ரி சகோதரிகள் - வாய்ப் பாட்டு, திரு தனஞ்ஜெயன் - மிருதங்கம் மற்றும் திரு சீதா ராம சர்மா - வயலின் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் நித்யாவிற்கு பக்கபலமாக இருப்பர்.

பொலிடிகல் சைன்ஸில் 1998ல் UC Berkeleyல் இளநிலை பட்டதாரியான நித்யா, தற்போது சான் ·ப்ரான்சிஸ்கோ பே ஏரியாவில் ஒரு non-profit organization பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். 2002-2003 நாட்டிய சீசனில் சென்னைக்கு மீண்டும் செல்ல இவர் உத்தேசித்துள்ளார்.

"நித்யாவின் நாட்டியம், ஒரு சில கால்கள் ஆடுவதற்கென்றே இருக்கின்றன என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறது" - தினமலர், ஜனவரி 2002

"அவர் பேசும் போது தான் அவர் அந்நிய நாட்டவர் என்று அறிய முடிகிறது - அவரது நாட்டியம் தூய்மையான, மாசற்ற பரதநாட்டியம்." தினத்தந்தி, ஜனவரி 2002

Saturday, August 10, 2002. 6:30pm. Cubberly Theater, 4000 Middlefield Road, Palo Alto, CA. Tickets: $10, General. $7, Seniors and Children (5-12).

For information call: 408-997-2702 or go to www.shrikrupa.org

© TamilOnline.com