நம்பிக்கை பொய்த்தது
"பாரதி" படத்திற்காக அவர் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். நன்றாக நடித்திருந்தாலும், ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிந்தாலும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. தற்பொது "குருவம்மா" படத்தில் ஒரு நடைபாதை வாசியாக நடித்திருக்கும் வேடத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற கனவில் இருக்கிறார் தேவயானி. துரை இயக்கத்தில் "பசி" படத்தில் ஷோபா நடித்தப் பாத்திரத்தைப் போன்றது இது.

ஆனால் படம் வெளியாகிய பிறகு விமர்சகர்களால் ஏகத்துக்கு விளாசப்பட்டது. வெற்றியும் பெறவில்லை. மோசமாக எடுக்கப்பட்ட இந்த படம் தேவயானியின் தேசிய விருது நம்பிக்கையை மீண்டும் தகர்த்துவிட்டது.

© TamilOnline.com