சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை)
சனிக்கிழமையன்று இதைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
கருப்பு எள்ளு - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்

எள்ளை நன்றாகக் கழுவிய பிறகு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

வடிகட்டி, எண்ணெய் விடாமல் வறுக்கவும். எள்ளு வெடித்து முடித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.

பின்னர் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடி செய்யவும். பின்னர் வெல்லம் சேர்த்து இரண்டும் நன்கு கலக்கும் வரை மிக்ஸியில் ஓட விடவும்.

ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

சிறிய எலுமிச்சை அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

சரஸ்வதி பூஜைக்கு கொண்டைக் கடலை சுண்டல் செய்வது விசேஷம். இதனுடன் உளுந்து வடை, பாசிப் பருப்பு பாயாசம் மற்றும் அப்பம் செய்வார்கள்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com