ஒக்காரை
தீபாவளி சமயங்களில் தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களான திருச்சி, மதுரை, திருநெல்வேயில் ''ஒக்காரை'' என்று ஒரு ஸ்வீட் செய்வார்கள். அதன் செய்முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒக்காரை

தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
வெல்லம் - 3 கப்
நெய் - 1 கப்
மற்றும் ஏலக்காய், முந்திரி, திராட்சை

செய்முறை

பருப்பு வகைகளை தனித்தனியே சிவக்க வறுத்து ஊற வைக்கவும்.

மூன்று மணிநேரம் ஊறியதும், அதிகம் தண்ணீர்விடாது அரைக்கவும். அரைத்த விழுதை ஆவியில் நன்றாக வேகவிடவும்.

வெல்லத்தை ஒரு கப் தண்ணீர்விட்டு கரைய விடவும். அதை வடிகட்டி மறுபடியும் நல்லமுற்றிய பாகுவரும் வரை வேகவிடவும். வெந்து எடுத்த பருப்பு கலவையை நன்கு உதிர்த்து பாகில் சேர்த்து கிளறவும்.

நெய்யில் முந்திரி திராட்சைகளை வறுத்து, அதனுடன் ஏலக்காயை பொடித்து சேர்க்கவும். பருப்பு கலவையும் நெய்யும் சேர்ந்து வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

இப்போது மிக சுவையான ஒக்காரை ரெடி.

நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைக்காமலேயே சுவைக்கலாம்.

விமலா பாலு

© TamilOnline.com