வெற்றிக் கொடி கட்டு!
இயக்குனர் - நடிகர் சேரன் கதாநாயகனாக தான் நடித்த முதல் படத்தினைப் பார்த்துவிட்டு அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் சேரன் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். தங்கர் பச்சானின் 'சொல்ல மறந்த கதை'க்குப் பிறகு தான் முதன் முதலாக தயாரித்து இயக்க இருக்கும் படத்தில் சேரனே கதாநாயகனாக நடிக்க உள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ட்ரீம் தியேட்டர்ஸ். படத்தின் பெயர் 'பொக்கிஷம்'.

தனது நெருங்கிய சொந்தங்களின் உறவினைப் பலப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கும் இளைஞனைப் பற்றிய கதை. தமிழ்ப் புத்தாண்டில் வெளியாக இருக்கும் இப்படத்தில் இவரது பெற்றோர்களாக மலையாள நடிகர் முரளியும் நடிகை சீதாவும் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com