அசத்தலான கதை
பார்த்திபனுக்கு ஜோடியாக 'இவன்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த செளந்தர்யா, இம்முறை விஜய்காந்தோடு ஜோடி சேருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிசியாக இருக்கும் இவர், தனது படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். பாக்கியராஜ் தொலைபேசியில் விவரித்த கதையைக் கேட்ட பிறகு தான் இவர் இந்த வாய்ப்பினை ஒத்துக்கொண்டாராம்.

படத்தின் கதையையும் தனது பாத்திரத்தையும் கேட்ட பிறகு, மிகவும் மகிழ்ச்சியடைந்த செளந்தர்யா, தனது சம்பளத்தைக் கூட குறைத்துக் கொண்டாராம். நல்ல வேடம் என்றால் எதுவும் செய்வோம்! சரி தானே!

கேடிஸ்ரீ

© TamilOnline.com