தகவல் - ஊழல்வாதிகளை உண்மை பேசவைத்தால்...
Truth Serum (இரத்தம் உறைந்தவுடன் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மஞ்சள் நிறமுடைய திரவம்) என்னும் திரவத்தினை உடலில் செலுத்தி தீவிரவாதிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க, ஒரு முயற்சியினைக் கையாளப் போவதாக ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலகப் போரிலிருந்து 1960 வரை, உளவாளிகளைப் பேசவைக்க ஒரு மருந்தினை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாம்.

சோடியம் பென்டோதல் (Sodium Pentothal) எனும் திரவத்தைச் செலுத்தியவுடன், உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம், மூளையினைத்தாக்கி, மனதினை இளகச்செய்து, எப்பேற்பட்ட கல்லுளிமங்கன்களையும் வாய்திறக்கச் செய்யுமாம். ஆனாலும், இது ஒரு முயற்சியே தவிர, உண்மையினை வரவழைக்கும் தன்மை, இத்திரவத்திற்கு உள்ளதா என்பது இன்னும் முற்றிலுமாக நிரூபணம் செய்யப்படவில்லையாம்.

எது எப்படியோ, அதைக் கொஞ்சம் வாங்கி நம்ம ஊருப்பக்கம் அனுப்பி, ஊழல்வாதிகளை உண்மை பேசவைத்தால் எப்படியிருக்கும்.

தகவல் ஆதாரம்: LosAngeles Times.

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com