அரவணை
ஒவ்வொரு பொங்கலுக்கும் சர்க்கரை பொங்கல் செய்து போர் அடித்துவிட்டதா? இந்தமுறை வித்தியாசமாக, கேரளாவில் பிரபலமான அரவணை செய்யலாமே! அரவணையை ஒருமுறை சாப்பிட்டவர்கள் பூலோகத்தில் சொர்க்கம் நிச்சயம் உண்டு என்று நம்புவார்கள்.

தேவையான பொருட்கள்
அரிசி - 1 டம்ளர்
வெல்லம் பொடி - 2 டம்ளர்
நெய் - 1/2 டம்ளர்
தேங்காய் - 1/2 கிண்ணம் (பல்லு பல்லாய் நறுக்கியது)

செய்முறை

அரிசியை நன்றாக வேகவிடவும். சாதம் குழையக் கூடாது, விரைவிரையாய் இருக்க வேண்டும்.

சாதத்தில் வெல்லப்பொடி போட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.

வெல்லம் உருகி கெட்டியாக ஆகும் வரை அவ்வப்போது சிறிது நெய் சேர்த்து கிளறவும்.

தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய்விட்டு தேங்காயை சிவக்க வறுத்து, அரவணையில் சேர்க்கவும்.

மைதிலி துரைசுவாமி

© TamilOnline.com