சின்மயா மிஷன் மாணவர்கள் பக்திபாடல்கள் வெளியீட்டு விழா
உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே சின்மயா மிஷன் செய்து வரும் சேவை சிறப்பும், உயர்வும் உடையதாகும். ஸ்வாமி சின்மயானந்தா அவர்களால் ஆரம்பிக்கப் பட்டு, இந்தியர்களிடையே ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பி ஆலமரம் போல் தழைத்து எங்கும் கிளைகள் நிறுவப்பட்டு வேர் ஊன்றி உள்ளது சின்மயாமிஷன் என்பதை யாவரும் அறிவர்.

இதில் கலிபோர்னியா வளைகுடா பகுதியில் இயங்கி வரும் இம்மிஷனின் படிப்படியான வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இதில் இளம் மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெற்றோர்கள் என ஓர் குடும்பமாக இணைந்து இயங்கி வருகின்றனர். கல்வி, மதம், கலாசாரம், சமூகசேவை பற்றிய நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது. ஸ்வாமிஜி அவர்களின் வேதாந்த வகுப்புகள், தியானம், சத்சங்க வகுப்புகள், உபன்யாசங்கள், குழந்தைகளின் பாலவிஹார் வகுப்புகள், விசேஷ மாதந்திர பூஜைகள், பண்டிகைகள் ஆகியவை நடத்த இடவசதி, பொதுமக்கள், குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொள்ள தேவையான பெரிய ஹால், வகுப்பறைகள், எல்லோரும் கார்நிறுத்த பார்க்கிங் வசதியை பெரிது படுத்த வேண்டிய அவசியத்தை முன்னிட்டும் அவ்விடம் பயிலும் 'ஸ்வராஞ்சலி' குழு மாணவ மாணவிகள் 'பக்திரசம்' எனும் பெயரில் பாடிய பலமொழி பக்தி பாடல்களை குறுந்தகடுகளாக தொகுத்து நிதி திரட்டுவதற்காக அற்பணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறுந்தகடு வெளியிடும் விழா மகாசிவராத்திரி அன்று நடந்தது.

மேலும் விவரங்களுக்கு,
http://www.chinmaya-sarjose.org

சீதாதுரைராஜ்

© TamilOnline.com