'காசுமேலே காசு வருது...'
முதல் படம் வெளிவருவதற்குள்ளாகவே புதுமுக நடிகை ஷர்மிலியைத் தயாரிப்பாளர்கள் தேடி வரத் தொடங்கியிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் 'காசுமேல காசுவந்து' என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல பேரின் மனதைக் கொள்ளையடித்த ஷர்மிலி, சூப்பர்குட் ·பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐம்பதாவது திரைப்படமான 'ஆசைஆசையாய்' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, புதுமுகம் தேடும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஷர்மிலியின் நடிப்புத் திறமை பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்கும் 'அன்பே அன்பே' படத்தில் ஷாம்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார். கூடவே, இப்போது நிறைய தொலைக்காட்சி விளம்பரங்களிலும் ஷர்மிலியைப் பாரக்கமுடிகிறது. மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் ஷர்மிலி.

தொகுப்பு: க.காந்திமதி

© TamilOnline.com