அதிகார மையங்களில் நவீன இலக்கியவாதிகள்
ஆட்டோ கட்டணத்தை உயர்த்திய தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேராகச் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 1 கோடி கொடுப்பதாகவும், அதில் இருந்து கிடைக்கும் வட்டியில் ஒவ்வொரு ஆண்டும் 5 இலக்கிய வாதிகளுக்குத் தலா 1 லட்சம் பரிசு அளிக்கும் படியும் கூறி இன்ப அதிர்ச்சி அளித்தார். அடுத்த ஆண்டு இந்த பரிசுகளைப் பெறப் போகிற இலக்கியவாதிகள் பட்டியலைப் பார்த்த பிறகுதான் இந்த விருதின் தரத்தினை மதிப்பிட முடியும். இங்கு, அரசியல் அதிகார மையங்களில் நவீன இலக்கியம் சமீப ஆண்டுகளாக இடம்பெற்று வருவதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த கவிஞர் கனிமொழி நவீன இலக்கியத்தின் பிரதிநிதியாக அதிகார மையத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும், கவிஞர் சல்மா, கவிஞர் இளையபாரதி, ரவிக்குமார், கவிஞர் அப்துல் ரகுமான் போன்றோர் பல்வேறு அரசு தேர்வுக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். அதிகார மையங்களில் இலக்கியவாதிகள் இடம் பெற்றிருப்பது நல்லதா? கெட்டதா?

தொகுப்பு: அப்பணசாமி

© TamilOnline.com