ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி
ஏ.வி.எம்.நிறுவனம் தனது 164ஆவது தயாரிப்பாக ''அன்பே அன்பே'' படத்தைத் தயாரித்துவருகிறது. இதில் ஷாம்-ஷர்மிலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எம்.என்.நம்பியார், மனோரமா, நித்யா, பூவிலங்கு மோகன், ஜானவி, வனிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் 500 நடனக்கலைஞர்களும், 1000 துணை நடிகர்களையும் வைத்து ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.

கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், புலியாட்டம், நையாண்டி மேளம் என்று அத்தனை நாட்டுப்புறக் கலைகளும் இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன. ''நம்ம ஊரு சாமி வந்துட்டாக...'' என்று தொடங்கும் இந்தப் பாடல் காங்கேயத்திலுள்ள வட்டமலை முருகன் கோவிலில் திருவிழா பாடல் காட்சியாக இடம் பெற்றுள்ளது. மணிரத்னம், வசந்த், சரண் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்த மணிபாரதி இந்தப் படத்தை இயக்குகிறார். கவிஞர் வாலி, பழனிபாரதி, கலைக்குமார், நா. முத்துக்குமார், கபிலன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார்.

தொகுப்பு:யாமினி

© TamilOnline.com