மூன்று தலைமுறைகளை சொல்லும் மூன்றாம் பவுர்ணமி
தேவா இசையமைக்க, லிவிங்ஸ்டன், அலெக்ஸ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மூன்றாம் புவர்ணமி என்றொரு புதிய படம் உருவாகிறது.

சின்னத்தம்பி உள்பட சுமார் 50 படத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவீந்தர் இப்படத்தின் மூலம் முதன் முதலாக இயக்குநராகிறார்.

கதாநாயகனாக டாக்டர் ஜானகிராம், முரளிராஜ் ஆகிய இரு புதிய முகங்கள் நடிக்கிறார்கள். நாயகிகளாக ப்ரீத்தி, திவ்யா நாயர் ஆகியோர் நடிக் கிறார்கள். படத்திற்கான வசனத்தை விஜயமுரளி கவனிக்க, வசனம் மற்றும் பாடல்களை கவனிக்கிறார் பிறைசூடன்.

மூன்று தலைமுறைகளைப் பற்றி கதை சொல்லும் மூன்றாம் பவுர்ணமி ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் அதிரடி சம்பவங்களை கொண்டது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com