மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
மராட்டிய மொழியில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற டோ ம்பவலி ஃபாஸ்ட் என்ற படம் தமிழில் எவனோ ஒருவன் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. மாதவன் நாயகனாக நடிக்கிறார்.

மராட்டியில் இப்படத்தை இயக்கிய நிஷிகாந்த் தமிழிலும் இயக்குகிறார். நாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் படத்திற்கான வசனத்தையும் எழுதுகிறார் மாதவன் என்பது சிறப்பு செய்தி.

இயக்குநர் சீமானும் இந்தப் படத்தில் வசனம் எழுதுகிறார் என்பது மற்றொரு தகவலாகும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com