ப்ரியாவின் இயக்கத்தில் கண்ணாமூச்சி ஏனடா...!
கண்ட நாள் முதல்ஒ பட இயக்குநர் பிரியா அடுத்து கண்ணாமூச்சி ஏனடா.. என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

கண்ட நாள் முதல் தந்த வெற்றியை அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரியாவிற்கு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் ஓகண்ணாமூச்சி ஏனடா.. பாடல் வரி மனதை தொட, அந்தப் பாடல் வரியையே தன்னுடைய அடுத்த படத்தின் பெயராக தேர்வு செய்து விட்டார்.

பிருத்விராஜ் நாயகனாக நடிக்க, சந்தியா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜும், ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com