ஒரு அரசியல் கொலை
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலையை அடுத்து மு.க. அழகிரி, முன்னாள் எம்எல்ஏ சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்னர். கிருட்டிணன் கொலையில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் நம்புகின்றனர். அந்த அடிப்படையிலேயே அழகிரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழகிரி கைதுக்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக அரசு செயற்படுகிறது. உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு பதிலாக கொலைப்பழியை திமுகவினர் மீது சுமத்துவது அதிமுகவின் பழிவாங்கும் அரசியலையே காட்டுகிறது என்கிறார்.

கிருட்டிணன் கொலைக்கான காரணங்கள் இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் கொலை அரசியல் நோக்கில் அலசப்படுவதற்கான அனைத்துக் காரணங்களையும் கொண்டுள்ளது.

துரைமடன்

© TamilOnline.com