பொடா பழி
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி விடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா சபதமிட்டார்.

தமிழ்நாடு முதன்மை மாநிலமாகாவிட்டாலும் செய்திகளில் முதன்மை மாநிலமாகவே மாறிவிட்டது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆட்சியாகவே நீடிக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்களில் திமுக கலந்து கொள்வதே இல்லை.காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகள், பாமக உள்ளிட்டவை எப்போதும் வெளி நடப்புச் செய்து கொண்டே இருந்தன.

பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்கள் மீது அதிமுக அரசின் தொடர் நடவடிக்கைகள் அதிமுக அரசு மீது அதிருப்தியை வளர்த்துள்ளன.

பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனத்தை தெரிவிப்பதோடு நில்லாமல்,. நக்கீரன் கோபால் பொடாவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர் என். ராம் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றையும் பத்திரிகையாளர் சங்கம் நடத்தி முடித்துள்ளது.

துரைமடன்

© TamilOnline.com