பருப்பு உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்

புளி - எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - கிண்ணம்
மிளகாய் - 8
தேங்காய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

புளியை ஊற வைத்துக் கரைத்து வைக்கவும். துவரம் பருப்பை
ஊற வைத்து மிளகாய், உப்பு, பெருங்காயம், தேங்காய் ஆகியவற்றுடன் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதைப் போட்டுக் கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்டிலி தட்டில் வைத்து வேக விட்டு எடுக்கவும்

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்துப் புளி தண்ணீரை ஊற்றி சாம்பார் பொடி, உப்பும் போட்டு கொதிக்க விடவும்

உருண்டைகளை அதில் போட்டுக் கொதி வந்ததும் இறக்கிவிடவும். இது மிக சுவையாய் இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com