டெஸ்மாவின் அடுத்த குறி
''அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாகவும் அவர்கள் போராட்டத்தை தூண்டும் வகையில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டதாகவும்'' கூறித் தமிழக அரசு அரசியல் தலைவர்கள் மீதும் டெஸ்மா சட்டத்தை பிரயோகித்துள்ளது.

திமுக தலைவர் மு கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சிபிஐ மாநிலச் செயலர் ஆர் நல்லகண்ணு, மற்றும் சிபிஐ(எம்) மாநிலச் செயலர் என் வரதராஜன் ஆகியோர் மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அரசு ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே பயன்பட்டு வந்த டெஸ்மா அரசியல் தலைவர்கள் மீதும் ஏவப்பட்டுள்ளது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com