ஜி.கே. வாசன் உள்ளே, இளங்கோவன் வெளியே
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அகில இந்திய காங்கிரஸ் செயலரும், மாநிலங்களவை உறுப்பினரு மான ஜி.கே. வாசனை நியமித்து மீண்டும் தமிழக காங்கிரஸில் ஒரு பெரிய அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அக்கட்சியின் தலைவர் சோனியா.

இளங்கோவன் தீவிர கருணாநிதி ஆதரவாளர் என்ற புகார்தான் இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப் படுகிறது. கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் கைது விவகாரத்தைக் கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நடைப்பெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் பங்கேற்றார் இளங்கோவன். ஆனால் அவர் ஈரோடில் நடைபெறும் மனிதச்சங்கிலியில் தான் பங்கேற்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. கருணாநிதியுடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஈரோடு செல்வதை இளங்கோவன் தவிர்த்ததுதான் அவருடைய பதவி மாற்றத்திற்கான விஷயம் என்கிறது அக்கட்சி வட்டாரங்கள்.

மக்களவைக்கு தேர்தல் வருவதற்கு இன்னும் சிலமாதங்களே இருக்கின்ற நிலையில் இளங்கோவன் மாற்றம் மிகவும் சர்ச்சைக்குரியதாகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

கேடிஸ்ரீ

© TamilOnline.com