விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
ஸ்ரீக்ருபா நாட்டிய பள்ளியின் குருவான விஷால் ரமணி அவர்கள் தலைசிறந்த ஆசிரியராக சென்னையில் கெளரவிக்கப் பட்டார். சென்னையில் ஐந்து நாட்கள் நடைபெற்ற டிசம்பர் 2006 வருடாந்திர இசை விழாவின் துவக்க நிகழ்ச்சியில் ஹிந்து நாளிதழின் தலைமை இயக்குநர் என். முரளி அவர்கள் சிறந்த ஆசிரியர் விருதை விஷால் அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியை சிவன் கலை அரங்கு ஏற்பாடு செய்திருந்தது. குரு விஷால் ரமணி சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியை சேர்ந்த ஸ்ரீக்ருபா நடன பள்ளியின் கலை இயக்குனர் ஆவார். அவர் ஸ்ரீக்ருபா பள்ளியின் மூலம் பல தலைமுறை வளைகுடா பகுதி மாணவர்களுக்கு கடந்த 30 ஆண்டு களாக பரதநாட்டியம் கற்று கொடுத்து வருகிறார். ஸ்ரீக்ருபா நிறுவியவரான ருக்மிணி ரமணி மற்றும் இயக்குநர் பாபநாசம் அசோக் ரமணி அவர்களும் இளைய தலைமுறையினர் இக்கலையை கற்று காப்பாற்றி போற்றுபவர் களாக்கும் விஷால் அவர்களின் முயற்சியை மிகவும் பாராட்டினார்கள்.

ஜோலியட் ரகு

© TamilOnline.com