மறுபடியும் இலவச வேட்டி, சேலை
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு ஆண்டுதோறும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு பொங்கலை யொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கி வந்து கொண்டிருந்தது. இம்முறை அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலையைக் காரணம் காட்டி இத்திட்டத்தை நிறுத்தி வைத்தது.

அரசின் இந்தத் திடீர் முடிவால் நெச வாளர்கள் சென்ற இரண்டு ஆண்டுகளாகப் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாயினர். சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், எதிர்க்கட்சிகளும் ஆளும்கட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பின.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி ஒரு கோடியே 55 லட்சம் இலவச வேட்டி, சேலைகளைத் தமிழக அரசு மறுபடியும் வழங்க முடிவு செய்தது. இந்த முறை கைத்தறிச் சேலைக்கு பதில் பாலியெஸ்டர் சேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஸ்ரீ

© TamilOnline.com