அகதிகள் கதை சொல்லும் 'ராமேஸ்வரம்'
'ஈ' பட நாயகன் ஜீவா மற்றும் பாவனாவின் நடிப்பில் உருவாகிறது 'ராமேஸ்வரம்'. பாரதிராஜா, பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த செல்வம் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

வித்யாசகர் இசையில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் ஆகியவற்றையும் செல்வம் கவனித்துக் கொள்கிறார்.

இலங்கையிலிருந்து உறவுகளையும், உடமைகளையும் இழந்துவிட்டு நம்பிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் வரும் ஓர் அகதியைப் பற்றிய கதைதான் ராமேஸ்வரம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com