தமிழர் கலைகளின் 'கூத்து'
மறைந்து வரும் நம் தமிழர்களின் கலைகள் பற்றி வியாபார நோக்கில் படமாக வருகிறது 'கூத்து'. கரகாட்டம், தெருக்கூத்து ஆகிய கலைகள் குறைந்து வருவதுடன் அதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாகி வருகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஒருநல்ல தீர்வை எப்படி ஏற்படுத்தலாம் என்பதுதான் படத்தின் கதை.

திருச்சி தொன்போஸ்கோ அலைகள் கலைத்தொடர்பகம் வழங்கும் இந்தப் படத்தைப் பீட்டர் ஞானசேகர் தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றையும், படத்தின் இயக்த்தையும் கவனித்துக் கொள்கிறார் எஸ்.பி. முகிலன்.

'நாம்' சுந்தர் கதாநாயகனாக நடிக்க புதுமுகம் பிரசிதா கதாநாயகி. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com