வெல்ல அடை, உப்பு அடை செய்யும் விதங்கள்
வெல்ல அடை

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிண்ணம்
வெல்லம் - 1 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது - 1/2 கிண்ணம்
ஏலக்காய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
காராமணி - 1 தேக்கரண்டி

செய்முறை

காராமணியை சுமார் நாலைந்து மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு குக்கரில் வேகவிடவும்.

அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் மாவாகப் பொடி செய்யவும். மாவை இளஞ்சிவப்பாக வறுக்கவும்.

வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லப் பொடியைப் போட்டுக் கரைந்ததும் மண், தூசி போன்றவற்றை வடிக்கட்டி வெல்லத் தண்ணீரை வாணலியில் விடவும்.

மேலும் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேங்காய்த்தூள், வெந்த காராமணி இவற்றைப் போட்டு, வறுத்துக்கொண்டு, மாவை தூவினாற் போல் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.

நிதானமாக எரியும் அடுப்பில் 5 முதல் 10 நிமிடங்கள் கிளறி கீழே இறக்கி அகலமான தாம்பாளத்தில் ஆறவைக்கவும்.

நன்றாக ஆறியதும் ஏலப்பொடி போட்டுக் கையால் நன்றாகப் பிசையவும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

சிறுசிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டி, நடுவில் ஓட்டை போடவும். இட்டலித் தட்டில் வைத்து இட்டலி வேகவிடுவது போல் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். கீழே இறக்கிச் சற்று ஆறியதும் எடுத்து வைக்கவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com